அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து அவரின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று நடந்த போது இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு இன்று பிற்பகல் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என்றனர்
இந்நிலையில், அமைச்சர் மீதான வழக்கைக் குறித்து 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் தொடங்கினார். அப்போது, அமைச்சரின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அவர்கள் நீதிபதியிடம் அடுத்த செவ்வாய்க்கிழமையில் இவ்வழக்கை விசாரிக்கக் கோரிக்கை வைத்தார். இதனால், இந்த வழக்கின் தேதி குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்று 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆகவே, வழக்கமாகப் பட்டியலிடப்படும் வழக்குகளையும் நான் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறியுள்ளார்.
- Advertisement -