Sunday, October 1, 2023 10:51 am

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 5) விடுமுறை

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி வட மாநிலங்களிலும் , கேரளாவிலும் அதிக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், கேரளா ஒட்டிய பகுதியான கோவை, நீலகிரியில் அடுத்த 3 நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யும் என’சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வால்பாறையில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 5) விடுமுறை அளித்து ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார். மேலும், வால்பாறையில் பெய்யும் கனமழை காரணமாகப் பேரிடர் மீட்புப் படையினர் அங்குத் தயார் நிலையில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், இந்த வால்பாறை பகுதியில் பெய்த கனமழை காரணமாகக் கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் கடந்த 24 மணி நேரத்தில் 14.7 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்