அஜீத் நடித்த ‘வேதாளம்’ படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமான நடிகர் கபீர் துஹான் சிங், தனது நீண்ட நாள் காதலான சீமா சாஹலை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.
கபீர் துஹான் சிங்கின் மணமகள் சீமா சலால் ஹரியானாவைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஆவார். கபீர் துஹான் சிங் மற்றும் சீமா சாஹல் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுமணத் தம்பதிகள் தங்கள் சிறப்பு நாளில் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
ஊடகங்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட கபீர் துஹான் சிங், “என் வாழ்க்கையில் இந்த புதிய இன்னிங்ஸைத் தொடங்குவதற்கு நான் பாக்கியமாகவும் அதிர்ஷ்டமாகவும் உணர்கிறேன். கடவுளும் எனது ரசிகர்களும் எனக்கு எப்போதும் நிறைய அன்பையும் ஆசீர்வாதங்களையும் அளித்துள்ளனர். இந்த ஆசீர்வாதங்கள் தொடரும் என்று நம்புகிறேன். சீமாவும், நானும் அவரது வாழ்க்கையில் எப்போதும் சிறந்த ஹீரோவாக இருக்க முயற்சி செய்கிறோம்.”
றெக்க, காஞ்சனா 3, அருவம், ஆக்ஷன் மற்றும் தெற்கத்தி வீரன் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் கபீர் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் பகாத் என்ற மராத்தி திரைப்படத்தில் நடித்தார்.
- Advertisement -
- Advertisement -