உங்கள் சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் சில நாட்களிலேயே நல்ல பலன்களைக் கொடுக்கும். அதைப்போல், இந்த ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் உங்கள் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.
மேலும், நீங்கள் ஆப்பிள் சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்குத் தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
- Advertisement -