Sunday, December 3, 2023 1:34 pm

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மீண்டும் முயற்சி : எதிர்ப்பு குழு கடும் கண்டனம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் அங்குள்ள மக்களுக்கு இருமல், கண் எரிச்சல் போன்ற பல உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டன. இதனால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த அலையை மூட உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மீண்டும் இந்த ஆலை இயங்கலாம் என உத்தரவிட்டதை அடுத்து அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் எதிர்பாராவிதமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டால் பலர் தங்களது உயிரிழந்தனர். இதனால், தமிழக அரசு அந்த ஆலைக்குச் சீல் வைத்து முடியது.
இதை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. அதில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது . அதில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் வேதாந்தா குழுமத்தின் முயற்சிக்கு ஆலை எதிர்ப்புக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. ஏனென்றால், இந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது வேதாந்தா குழும நிறுவனம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்