Friday, December 1, 2023 7:29 pm

இந்தியா – ஆஸ்திரேலியா அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில், இந்திய அணியை 209 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி இந்த உலகக்கோப்பையைக் கைப்பற்றிருந்தது. இந்நிலையில், இந்த உலகக்கோப்பையில் மெதுவாகப் பந்து வீசியதற்காக, போட்டிக்கான கட்டணத்திலிருந்து இந்திய அணிக்கு 100%-ம் ஆஸ்திரேலியாவுக்கு 80%-ம் அபராதமாக விதித்தது ஐசிசி.
அதேசமயம், இந்த உலக டெஸ்ட் இறுதிப்போட்டியில் 3வது நடுவரின் முடிவை விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 15% அபராதம் விதித்துள்ளது ஐசிசி. ஏற்கனவே மெதுவாகப் பந்து வீசியதற்காக, போட்டிக்கான முழு ஊதியமும் (100%) இந்திய அணிக்கு அபராதமாக விதிக்கப்பட்ட நிலையில், சுப்மன் கில் 115% அபராதம் கட்ட வேண்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்