இரவு தூங்கும்போது நமக்குப் பிடித்த மெல்லிசை பாடலை கேட்டால் மனதில் இருக்கும் கவலைகளை எளிதாக மறக்கப் பலரும் விரும்புவதால், அதற்காக அவர்கள் காதில் ஹெட் போன் மாட்டி அதில் கேட்டுக் கொண்டே தூங்குவார்கள். இதனால், நம் மனதின் கவலைகள் அனைத்தும் தீர்ந்து தூக்கத்தை வரவைக்கும்.
ஆனால், நமக்கு என்னதான் பாடல்களைக் கேட்டுத் தூக்கத்தை வர வைத்தாலும் இயற்கையாகத் தூக்கம் வருவதைவிட நல்லது வேறு ஒன்றும் இல்லை. உங்களுடைய தூக்கம் சரியாக இருக்கும் பட்சத்தில் உடலில் ரத்த அழுத்தம் குறையும், அத்துடன் இதயத் துடிப்பும் சீறாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -