Friday, December 8, 2023 2:24 pm

அதிமுக – பாஜக கூட்டணி மறுபரிசீலனை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து, அதிமுகவின் EX அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், ”அண்ணாமலையின் போக்கு இப்படியே தொடர்ந்தால் கூட்டணி குறித்து அதிமுக முடிவெடுக்கும். அண்ணாமலையை, பாஜக தலைமை கட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால், அண்ணாமலையின் இதுபோன்ற பேச்சுக்கள் தொடர்ந்தால், கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்” என்றார்.
மேலும், அவர் ” தன்னை முன்னிருத்தும் வகையில் தொடர்ச்சியாகப் பேசிவரும் அண்ணாமலையின் பேச்சை பாஜக தலைமை கட்டுப்படுத்த வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது, பிரதமராக மோடி வரக்கூடாது என்பதையே அண்ணாமலையின் செயல் காட்டுகிறது . அதிமுக ஒரு ஆலமரம், பாஜக ஒரு செடி. சட்டமன்றத்தில் 4 சீட்டு யாரால் வந்தது? அதிமுகவால் வந்தது. எங்களோடு இருந்தால்தான் அவர்களுக்கு பலம். கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை போனாரே ஜெயிச்சுட்டாரா? இவர் போன ராசி அங்க அம்போனு போயிடுச்சு. ஆகவே,  எல்லாவற்றிற்கும் ஒரு எல்லையுண்டு, அதுவரை பார்ப்போம்” எனச் சரமாரியாகப் போட்டுத் தாக்கியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்