பொதுவாக மரத்திலிருந்து இளநீரைப் பறித்து, உடனடியாக குடித்து விடுவது தான் நல்லது. இரண்டு மூன்று நாட்கள் கடந்தோ, ப்ரிஜ்ஜில் வைத்திருந்தோ அல்லது இரண்டு, மூன்று மணி நேரம் கழித்தோ குடிப்பது நல்லதல்ல. மேலும், இந்த இளநீரின் மருத்துவ குணம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால், அதை வெட்டிய அரை மணி நேரத்திற்குள் பருக வேண்டும்.
அப்படிப் பருகும் போது, இதில் எலுமிச்சை சாறு, குளுக்கோஸ் போன்ற எதையும் கலந்து குடிக்கக் கூடாது. அதைப்போல், சர்க்கரை நோயாளிகள் இளநீரைக் குறைவாகக் குடிக்கலாம். மேலும், இந்த சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குடிக்கவே கூடாது. ஆனால் இதய நோயாளிகளுக்கு இளநீர் குடித்தால் நல்லது.
- Advertisement -