தஞ்சாவூரில் இன்று (ஜூன் 7) நடந்த வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகிய இருவரும் சேர்ந்து வாழ்த்தியுள்ளனர். மேலும், இந்த கட்சிக்கு தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவும் இவ்விருவரும் கலந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மணமக்களை வாழ்த்திய பின் மேடையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், “நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படவேண்டும் என்றுதான் அனைத்து இதயங்களும் சொல்கின்றன. இந்த அரசியல் விளையாட்டில் நாம் ஒன்றிணைந்தால், இந்தியாவில் யாராலும் வெற்றி பெற முடியாது” எனக் கட்சி தொண்டர்களுக்குக் கூறியுள்ளார்.
இதையடுத்து பேசிய டிடிவி தினகரன், “6 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக தொண்டர்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி, இது ஒரு நல்ல தொடக்கம்” எனக் கூறினார்.
- Advertisement -