தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் கோடைக் காலம் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில், மே 3ஆம் தேதியன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தது. ஆனால், அப்போது ஏற்பட்ட புயலால், தமிழகத்தில் அதிகபட்சம் 2 வாரங்களாகக் கனமழை பெய்து வெப்பத்தைத் தணித்து வந்தது. பின்னர், இப்புயல் மியான்மர் நோக்கிச் சென்ற பின் தமிழகத்தில் பல மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் குறைந்து வெப்ப நிலை அதிகரித்தது.
இந்நிலையில், இந்த அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னும் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. அந்தவகையில், நேற்று (ஜூன் 5) சென்னை நுங்கம்பாக்கத்தில் 2வது முறையாக 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெயில் கொளுத்தி வந்தது. அதேசமயம், இது கடந்த 200 ஆண்டுகளில் 7வது முறையாக இந்த 108 டிகிரியை தாண்டி வெயில் பதிவானதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.
- Advertisement -