இந்த 2023 ஆம் ஆண்டில் அரசு தொழில் பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தொழில் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் தமிழக அரசு ஒதுக்கீட்ட இடங்களைச் சேர மாணவர்களுக்கு இன்று (ஜூன் 7) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று அரசு ஐடிஐயில் சேர www.skilltraining.tn.gov.in என்று இணையதளம் மூலமாக இன்று இறுதியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லையானால், நேரடியாக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் மாணவர்கள் வந்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். இதில் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. ஆனால், அதேசமயம் விண்ணப்பம் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலை இல்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப் புத்தகம் ,பஸ் பாஸ், வரைபட கருவிகள், மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூபாய் 750 வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.
- Advertisement -