தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மிலானி , கடந்த 2021 ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது அதிமுகவின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலத்தில் வேட்புமனு தாக்கல் செய்த போது அவரது சொத்து மதிப்பைக் குறைத்துக் கட்டியுள்ளதாகச் சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.
இதுகுறித்து விசாரித்த சேலம் நீதிமன்றம் இந்த மனுவில் உண்மைத் தன்மை இருந்தால், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தச் சேலம் குற்றப்பிரிவு போலீஸ்க்கு உத்தரவிட்டது. இந்நிலையில், குற்றப்பிரிவு போலீஸார் செய்த விசாரணையின் முடிவில் எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆதாரத்தைத் திரட்டி வந்தன.
இதையடுத்து, சேலம் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட விசாரணை அறிக்கையைக் குற்றப்பிரிவு போலீஸார் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் சொத்து விவரங்கள் தவறாக இருப்பதாகத் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது வேட்புமனுவில், தவறான தகவல் அளித்ததாக இபிஎஸ்-க்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 6) விசாரணை நடைபெற இருக்கிறது
ஆனால், தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -