நீங்கள் இஞ்சிச் சாற்றைத் தொப்புளைச் சுற்றி குழந்தைகளுக்கு பற்றுப்போட்டால் அஜீரணம் நீங்கும். அதைப்போல், நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், சிறிதளவு இஞ்சி துண்டினை எடுத்து மென்று சாப்பிட்டால் சரியாகும்.
மேலும், இந்த இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின்பு நீரை எடுத்து அதில் துளசி இலைச் சாற்றைக் கலந்து ஒரு டீஸ்பூன் வீதம் ஒரு வாரச் சாப்பிட்டு வந்தால் வாய்வுத் தொல்லை நீங்கும். அதைப்போல், இந்த இஞ்சிச் சாறு மற்றும் வெங்காயச் சாறு இரண்டையும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, அதனுடன் சிறிதளவு. தேன் சேர்ந்து சாப்பிட்டால் வாந்தி கட்டுப்படும்.
- Advertisement -