அம்மன் சன்னதியில் நெய் தீபம் ஏற்றுவதால் அவர்களுக்குப் பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது, கோரிக்கைகள் நிறைவேறுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் அனைவரும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டுச் செய்கிறார்கள். எண்ணிக்கை வடிவில் நெய் தீபம் ஏற்றினால் அவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள்.
அதன்படி, 5 நெய் விளக்கு ஏற்றினால் சிறந்த கல்வி, ஞானம் பெறலாம். 9 நெய் விளக்கு ஏற்றினால் நவகிரக தோஷம் நீங்கும், 12 நெய் விளக்கு ஏற்றினால் வேலையில் தடை நீங்கும்,வேலைவாய்ப்பு கிடைக்கும். 18 நெய் விளக்கு ஏற்றினால் காலசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கும். 27 நெய் விளக்கு ஏற்றினால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். 36 நெய் விளக்கு ஏற்றினால் சகல தோஷமும் நீங்கும். 48 நெய் விளக்கு ஏற்றினால் தொழில் அபிவிருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யமும் பெறலாம். 108 நெய் விளக்கு ஏற்றினால் அம்மன் அருள் கடாட்சம் பெறலாம்.
- Advertisement -