பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரில் ககாரியா, அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாகக் கங்கை நதியின் நடுப்பகுதியில் பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த பாலத்தின் கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில் , கடந்த ஜூன் 4ஆம் தேதி மாலை 6 மணியளவில் இப்பாலம் திடீரென இடிந்து நதியில் விழுந்தது.
மேலும், இப்பாலம் கட்டுவதற்கு சுமார் ரூ1,710 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், இப்பாலம் கடந்த 2021ஆம் ஆண்டு கட்டப்பட்ட போதும் இதேமாதிரி இடிந்து விழுந்தது. இப்படி பாலம் விழுவது தொடர்ந்து 2வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பீகார் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் அவர்கள், ” கங்கை நதி மீது கட்டப்பட்டு வந்த பாலத்தைத் தகர்த்தது பாஜகதான்; நாங்கள் பாலத்தைக் கட்டுகிறோம்; அதை அவர்கள் தகர்க்கின்றனர்” எனக் குற்றச்சாட்டி உள்ளார்.
- Advertisement -