உங்களுக்குக் குறட்டை உண்டாகக் காரணம் என்ன? சுவாசப் பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை உண்டாகிறது. இந்நிலையில், இந்த குறட்டையைத் தடுக்க தேவையான பொருட்கள்: மஞ்சள், ஏலக்காய், தேன் ஆகும்
இதற்கான செய்முறை: கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுக்கவும். இதில் ஏலக்காய் தட்டிபோடவும். பின்பு ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்க வைக்கவும். இறுதியாக வடிகட்டி தேன் சேர்க்கவும். இதனை இரவு தூங்கப்போகும் முன்பு தினமும் 50 மில்லி அளவுக்குக் குடித்துவரக் குறட்டை ஒலி குறைந்து விடும். அதைப்போல், இது சளிக்கு மருந்தாகவும் அமைகிறது. இந்த மருந்து நெஞ்சுச் சளியையும் கரைக்கும் என்பது கூடுதல் பலன் ஆகும்.
- Advertisement -