பொதுவாக அளவுக்கு அதிகமாகக் குளிர்பானங்களை எடுக்க வேண்டாம் எனக் கூறி வருகின்றனர். அப்படி எடுத்துக்கொண்டால் உடலில் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி, இந்த வெயில் காலத்தில் அதிகம் அருந்தும் குளிர்பானங்களினால் முடி உதிர்வு ஏற்படும் என தற்போது நடத்தப்பட்ட ஆய்வுகளில் அதிர்ச்சிகரமான தகவல் வந்துள்ளது.
மேலும், நாம் உண்ணும் குளிர்பானங்கள் உடலிலுள்ள இன்சுலின் அளவை பாதிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதால் தலைமுடி பிரச்சனை உண்டாகிறது என்றனர். இதேபோல் அதிக வெள்ளை சர்க்கரை சாப்பிடுவது, டீ, காஃபி அதிகம் குடிப்பதும் முடி உதிர்வை ஏற்படுத்துகின்றன.
- Advertisement -