இன்றைய சூழலில் பல பெண்கள் அல்லது ஆண்களுக்குத் திருமணத் தடை ஏற்படுகிறது. என்ன காரணத்தால் இப்படி தடை பெறுகிறது என்பது பலருக்கும் புரியாமலே இருக்கிறது. இதற்குத் தீர்வாக உங்கள் வீட்டில் வளர்க்கும் வாழை மரத்தை வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். ஏனென்றால், வடக்கு திசையை ஆளுபவர் வியாழன் பகவான்.
ஆனால், நீங்கள் வாழைமரத்தை இந்த தென் கிழக்கு, தெற்கு அல்லது மேற்கு திசைகளில் வைக்கக் கூடாது. இதனால், வீட்டிற்குள் மங்கள சக்திகள் வருவது தடுக்கப்படும் என ஜோதிடம் சொல்கிறது. வாழை மரத்தின் முன்பு, வியாழக்கிழமை நெய் தீபம் ஏற்றி 9 முறை சுற்றி வந்தால், குரு தோஷம், திருமணத்தடைகள் முதலியன நீங்கிவிடும் என்பது ஐதீகம்
- Advertisement -