பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும் , பாஜக எம்.பிமான பூஷன் சரண் மீது கைது செய்யக்கோரித் தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இணையத்தில் மல்யுத்த வீரர்கள் நடத்தும் போராட்டம் கைவிடப்பட்டதாகத் தகவல் பரவியது .
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் அவர்கள், ”போராட்டத்தைக் கைவிட்டுவிட்டதாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானது. நீதிக்கான யுத்தத்தில் நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை. போராட்டத்துடன் எனது ரயில்வே பணியையும் மேற்கொள்வேன். நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். அதைப்போல், பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகாரை திரும்பப்பெற்றதாக பரவும் தகவல்களும் பொய்” எனத் கூறினார்.
- Advertisement -