பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரில், அகுவானி சுல்தங்கஞ்ச் என இரு மாவட்டங்களை இணைக்கும் வகையில், கங்கை நதி மீது கட்டப்பட்டு வந்த புதிய மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இது சுமார் ரூ 1,710 கோடி வரை இப்பாலம் கட்ட செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்கனவே கங்கையில் இப்பாலம் கட்டப்பட்ட போது இதே மாதிரி இடிந்து விழுந்தது. இது தொடர்ந்து 2வது தடவையாக தற்போது இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, பொதுமக்கள் இந்த பாலம் கட்டுவதற்காகப் பல தரமில்லாத பொருட்களே உபயோகிக்கின்றனர். ஏனென்றால், அரசு சார்பில் விடப்படும் பாலம் கட்டும் டெண்டரில் ஒப்பந்ததாரர்கள் வாங்க வேண்டுமென்றால் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அதிக தொகை கொடுப்பதால் இந்த பாலம் கட்டுவதற்குத் தரமில்லாத பொருட்களை வைத்துக் காட்டுகின்றனர் என அப்பகுதி மக்கள் மாநில அரசு மீது தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில், காவலாளியாக பணியாற்றி வந்த நபர் மாயமாகியுள்ளார். தற்போது அவரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது எனத் தகவல் வந்ததுள்ளது.
- Advertisement -