ஒடிசாவில் கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதியில் நடந்த கோரமண்டல் ரயில் கோர விபத்தில் பல நூற்றுக்கணக்கான பேர் பலியானார்கள். இந்நிலையில், இந்த விபத்து குறித்து பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்துள்ளார்.
அதில், அவர் ” நான் ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, கடந்த 1999ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து நடந்தது. அப்போது, நானாகச் சென்று பிரதமர் வாஜ்பாயிடம் எனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தேன். முன்பெல்லாம் ரயில்வேக்கு எனத் தனி பட்ஜெட் இருந்தது. ஆனால், பாஜக அரசு அந்த முறையை தற்போது முற்றிலும் ஒழித்துவிட்டது” எனத் தெரிவித்தார்
- Advertisement -