பொதுவாகச் சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றைத் தினசரி பின்பற்றச் சொல்லுவார்கள். அந்த வகையில், இந்த சர்க்கரை நோயாளிகள் தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்து சுறுசுறுப்பு உண்டாகும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர்கள் இப்படி சைக்கிள் ஓட்டும்போது அவர்களது இதயத்துடிப்பு சீராகும், டைப் -1, டைப் -2 சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். அதைப்போல், இந்த மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கு இந்த சைக்கிளிங் சிறந்த தீர்வு. மேலும், இது கால், தொடைப்பகுதி தசைகள், எலும்புகள், முதுகுத் தண்டுவடம், இடுப்புப் பகுதி போன்றவை வலிமை பெறப் பெரிதும் உதவுகிறது.
- Advertisement -