நேற்று முன்தினம் ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் ஏற்பட்ட கோரமண்டல் ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், ரயில்வே செயல்பாடுகள் துறை அதிகாரி ஜெயா வர்மா சின்ஹா சற்றுமுன் இந்த விபத்து குறித்து விளக்கமளித்துள்ளார்.
அதில், இந்த பஹானாகா ரயில் விபத்தில், கோரமண்டல் விரைவு ரயில் ஓட்டுநர் மீது எந்த தவறும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஏனென்றால், இந்த கோரமண்டல் ரயிலுக்குப் பச்சை சிக்னல் கிடைத்தால் தான் ஓட்டுநர் ரயிலை இயக்கியதாகவும், அனுமதிக்கப்பட்ட வேகமான 130கி.மீ. வேகத்தை விட 128 கி.மீ. வேகத்திலேயே ரயில் சென்றதாகவும் ஜெயா வர்மா சற்றுமுன் விளக்கமளித்துள்ளார்.
- Advertisement -