நேற்று முன்தினம் ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் பயங்கர விபத்துக்குள்ளானது. அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், ” எனக்கு ஒன்றிய அரசிடம் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரதமர் மோடியிடம், ”இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்? ரயில் ஓட்டுநர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பணி நேரத்தை விடக் கூடுதலாக பணிபுரியக் கட்டாயப்படுத்துவது ஏன்? எனச் சரமாரி கேள்வி கேட்டுள்ளார்.
மேலும், அவர், ” இந்த ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, பிரச்சனையைத் திசை திருப்புவதற்காகவா? ரயிலில் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டது ஏன்? காங்கிரஸின் ‘ரக்ஷா கவாச்’ என்ற திட்டத்தை ‘கவாச்’ என மாற்றிய அரசு, 4% தடங்களில் மட்டுமே செயல்படுத்தியிருப்பது ஏன்? எனப் பல கேள்விகளை அடுக்கடுக்காக மோடி அரசிடம் கேட்டுள்ளார்.
- Advertisement -