தமிழர் பாரம்பரியத்தில், சுவாமிக்கு அர்ச்சனை செய்வதில் தொடங்கி திருமண நிச்சயதார்த்தத்துக்குத் தாம்பூலம் மாற்றுவது வரை வெற்றிலையின் பங்கு முக்கியமானது. அப்படி புகழ்வாய்ந்த வெற்றிலையில்லாமல் எந்த நிகழ்வுகளும் முழுமை பெறுவதில்லை. பொதுவாகத் திருமணங்களில் உணவுக்குப் பின்னர் வெற்றிலைபோட்டு ‘தாம்பூலம் தரித்தல்’ நம் பாரம்பரியத்தின் தனித்துவமான அடையாளம்.
அதைப்போல், இந்த ஆரத்தி எடுக்க, முக்கியமான ஒப்பந்தங்களுக்கு அச்சாரமிட என நீள்கிறது இதன் முக்கியத்துவம். இவை ஒருபுறம் இருக்கட்டும். உண்மையில், வெற்றிலை பல அபாரமான மருத்துவக் குணங்களைக் கொண்டது. வெற்றிலையை மருத்துவக் காரணங்களுக்காக எப்படிப் பயன்படுத்தலாம் பார்க்கலாமா?
இது நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும் நோயின்றி காக்கும் தன்மை கொண்டதுதான் இந்த வெற்றிலை. மேலும், இந்த கற்ப மூலிகை வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளதால் உடல் எடையைக் குறைக்கும். இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளதால் மலச்சிக்கல் நீங்கும், நன்கு பசி உண்டாகும், வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.
- Advertisement -