இந்த ஆயுத பூஜையின் வரலாறு மிகவும் சுவராசியமானது. பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்ற போது நாட்டையும், பெருமையும் இழந்தனர். அப்போது தங்களின் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் மறைத்து வைத்துள்ளனர். பின்னர் 14 வருட வன வாசத்திற்குப் பின் நாடு திரும்பிய அவர்கள் அதை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு வருடமும் பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர்.
இவ்வாறு, அவர்கள் ஆயுதம் வைத்து வணங்கியதால் ஆயுத பூஜை என்று அழைக்கப்படுகிறது. இன்று நமக்குப் பயன்படும் உயிரற்ற பொருட்கள், உயிருள்ள பொருட்கள் என அனைத்தும் மக்களுக்கு ஒரு பகுதியாகப் பயன்படுகின்றன என்பதை உணர வேண்டும்.
- Advertisement -