Friday, April 19, 2024 9:23 pm

இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நேற்று இரவு ஒடிசாவின் பாலசோர் பகுதிக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில், இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர், 1000க்கு மேற்பட்டோர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஒடிசா ரயில் விபத்து குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும். இதுவரை, இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடாக ரயில்வே வழங்குகிறது.விபத்தில் சிக்கிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவோம், மீட்புப் பணி நிறைவடையும் வரை ரயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் ஒத்துழைத்து பணியாற்றுவோம்” எனப் பேட்டியளித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்