நேற்று இரவு ஒடிசாவின் பாலசோர் பகுதிக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில், இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர், 1000க்கு மேற்பட்டோர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஒடிசா ரயில் விபத்து குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும். இதுவரை, இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடாக ரயில்வே வழங்குகிறது.விபத்தில் சிக்கிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவோம், மீட்புப் பணி நிறைவடையும் வரை ரயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் ஒத்துழைத்து பணியாற்றுவோம்” எனப் பேட்டியளித்துள்ளார்.
- Advertisement -