ரத சப்தமி அன்று சூரிய உதயத்திற்கு முன் எழுந்து எருக்கு இலையைப் பயன்படுத்தி புனித நீராடவேண்டும். அப்படி, அந்த நேரத்தில் புனித நீராடுவதன் மூலம், அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட்டு, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனாலேயே ரத சப்தமி “ஆரோக்கிய சப்தமி” என்றும் அழைக்கப்படுகிறது.
அந்த நாளில், சூரிய பகவானுக்கு நெய் விளக்கேற்றிச் சிவப்பு மலர்களால் பூஜை செய்து தீபம் காட்டி வழிபடவேண்டும். மேலும், இந்த ரத சப்தமி நாளில் சூரிய காயத்ரி மந்திரம், சூரிய சஹஸ்ரநாமம், ஆதித்யஹிருதயம் மற்றும் சூர்யாஷ்டகம் பாராயணம் செய்வது மேன்மை தரும். சூரிய கடவுளை இந்த ரத சப்தமி நாளில் வழிபடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் வெற்றிகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- Advertisement -