நேற்று கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதிக்கு வந்த போது தவறான சிக்னலால் அடுத்தடுத்த 3 ரயில்கள் இடித்தால் தடம் புரண்டு, அதிக பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில், அங்கு மீட்புப் பணிகள் நேற்று முதல் நடைபெற்று வந்தது. இதில் பல பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த ரயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் பயணித்திருப்பதால் அவர்கள் குறித்து அறியத் தமிழக அரசின் மீட்பு படை ஒடிசாவுக்கு விரைந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை குழுவினர் ஒடிசாவில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு விரைந்தனர். அங்கு அமைச்சர்கள் குழு விபத்து நடந்த இடத்தில் உள்ள நிலவரங்களையும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள குழுவினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விபரங்கள் குறித்தும் உடனுக்குடன் அரசுக்குத் தெரிவிக்க உள்ளனர்
- Advertisement -