இன்றைய தலைமுறையினரைப் பாடாய்ப்படுத்தி வரும் மிக முக்கிய நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே பலரும் பெருங்குழப்பத்துக்கு ஆளாவது உணவு பற்றித்தான். ஏனென்றால், சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது என்று தெரிந்துகொள்வது மிக முக்கியமாகும்.
பொதுவாகச் சர்க்கரை நோயாளிகள், மூன்று வேளை உணவை, ஆறு வேளையாக சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். எதையுமே அளவோடு கொஞ்சமாகச் சாப்பிட வேண்டும். அதேசமயம், இந்த சர்க்கரை சாப்பிட்டால்,உடலுக்கு இனிப்பைத் தவிர வேறு எந்தப் பலனையும் தருவது இல்லை. ஆகவே, இந்த இனிப்புகளை நிறையச் சாப்பிடுவதால்தான் உடலில் சர்க்கரைச் சத்து சேர்ந்துவிடுகிறது. எனவே, இது தவிர்ப்பது முக்கியம்
- Advertisement -