இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி, இலங்கை-ஆப்கானிஸ்தான் இடையே முதல் ஒருநாள் போட்டி ஹம்பன்டோட்டாவில் இன்று (ஜூன் 2) முதல் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காகச் சிறப்பாக விளையாடிய மதீஷா பத்திரானாவை “குட்டி மலிங்கா” என ரசிகர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
தற்போது, இந்த ஒரு நாள் போட்டியில் இலங்கையின் இளம் வீரர் மதீஷா பத்திரனா அறிமுக வீரராகக் களமிறங்கியுள்ளார். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக ஆடிய இவர் பந்துவீச்சில் கலக்கியது போல், சொந்த நாட்டுக்காகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -