பொதுவாக மண் பாண்டங்கள் கழுவுவதற்கு எளிதானவை. ரசாயனப் பொருள்களைக் கொண்டும் கழுவ வேண்டாம். நம் உடலுக்குள் செல்லும் கெமிக்கல்களின் அளவு குறையும். அதைப்போல், பனிக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் கலந்து இருக்கும். எனவே நீர் ஆவியாவது குறையும். எனவே, பானையில் இருக்கும் நீரும் குறைந்த அளவே குளிர்ச்சி அடைகிறது.
மண்பானையில் நிறைய நுண்துளைகள் இருக்கும். இதன் மூலம் நீராவி, உணவுக்குள் சீராக ஊடுருவுகிறது. இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப் போன்ற தன்மையைப் பெறுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மண்பாண்டங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையைச் சமன்படுத்தும் தன்மை கொண்டவை. மண்பாண்டச் சமையல் அதிக எண்ணையைக் சேராது. இதுவும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியக் காரணம்.
மேலும், இந்த ஃபிரிட்ஜில் இருக்கும் நீர் பனிக்கட்டி ஆவது போல, பானையில் இருக்கும் நீர் ஆவாது. இது சிறிய நுண்துளைகள் வழியே உள்ளிருக்கும் நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருப்பதால் பானையின் வெப்பமும் பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப் படுவதால் உள்ளிருக்கும் நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது.
- Advertisement -