நாம் விநாயகரைத் துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. அதைப்போல், சிவனுக்குத் தாழம்பூ உதவாது, தும்பை, வில்வம், கொன்றை முதலியன விசேஷம். மேலும், இந்த பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது. அதிலும், இந்த வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.
மேலும், கோயிலில் ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. ஆனால், பூக்களில் வில்வம், துளசி ஆகிய இரண்டு பூக்களை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.
- Advertisement -