கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படை சேர்ந்த பயிற்சி விமானம் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி எரிந்து சேதமாகியுள்ளது. அப்போது இந்த விமானத்தை ஒட்டிக் கொண்டிருந்த இரண்டு விமானிகள் பாராசூட் மூலமாகக் குதித்து உயிர் தப்பினர். இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள், முதற்கட்ட விசாரணையில் வானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக இவ்விபத்து நடந்தாக தகவல் அளித்தனர்.
மேலும், இதில் தப்பித்த 2 விமானிகளுக்கும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், தனி ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு எலகங்கா விமானப்படைத் தளத்தில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தற்போது விபத்து நடந்த இடத்தில், சாம்ராஜ் நகர் மாவட்ட கூடுதல் மாவட்ட ஆட்சியர் காத்யாயினி மற்றும் விமானப்படை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்
- Advertisement -