Saturday, April 20, 2024 12:09 am

கர்நாடகாவில் கோர விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படை சேர்ந்த பயிற்சி விமானம் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி எரிந்து சேதமாகியுள்ளது. அப்போது இந்த விமானத்தை ஒட்டிக் கொண்டிருந்த இரண்டு விமானிகள் பாராசூட் மூலமாகக் குதித்து உயிர் தப்பினர். இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள், முதற்கட்ட விசாரணையில் வானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக  இவ்விபத்து நடந்தாக தகவல் அளித்தனர்.
மேலும், இதில் தப்பித்த 2 விமானிகளுக்கும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், தனி ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு எலகங்கா விமானப்படைத் தளத்தில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தற்போது விபத்து நடந்த இடத்தில், சாம்ராஜ் நகர் மாவட்ட கூடுதல் மாவட்ட ஆட்சியர் காத்யாயினி மற்றும் விமானப்படை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்