புதிய நாடாளுமன்றத்தைச் செங்கோல் நாட்டித் திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து, குரல் வளையை நெறிக்கும் இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசின் கொடுங்கொன்மைச் செயல் வெட்கக்கேடானதாகும் எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து, இவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதற்குத் தமிழக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்துச்சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து” தனது வலிமையான கருத்தைப் பதிவுசெய்து, கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு, தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி எனச் சீமான் தற்போது கூறியுள்ளார்.
- Advertisement -