Friday, April 26, 2024 1:40 am

இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜுக்கு அபராதம் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடந்த 2010 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் இத்தாலியிலிருந்து (Maserati Granturismo S Coupe) எனும் சொகுசு காரை இறக்குமதி செய்துள்ளார். பின்னர், இந்த காரை தமிழகத்தில் ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். ஆனால், அப்போது ஹரீஷ் ஜெயராஜ் இந்த காருக்கான நுழைவு வரி செலுத்தவில்லை எனக் கூறி இந்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.
இந்நிலையில், இதுகுறித்த வழக்கில் இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜுக்கு அபராதம் விதித்துத் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். பின்னர், கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த காருக்கான நுழைவு வரி பாக்கியையும், அபராதமும்  செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம். ஆனால், ஏற்கனவே இந்த வரியைச் செலுத்தியதால் அபராதம் விதித்ததற்குத் தடை விதிக்க ஹரீஷ் ஜெயராஜ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது, இதுகுறித்த விசாரணையில் , இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி ஏற்கனவே செலுத்தியதால், விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்காலத் தடை  விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்