சிங்கப்பூரில் உள்ள புகழ் பெற்ற மாரியம்மன் கோவிலில் தலைமை அர்ச்சகராக பணியாற்றி வரும் கந்தசாமி சேனாதிபதி கோயில் நகைகளுக்குப் பராமரித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் கோவில் நகைகளைக் கணக்கெடுப்பு செய்தபோது, கந்தசாமி அவற்றை அடகு வைத்து மோசடி செய்தது தெரிய வந்தது.
இதனால், இவர் இந்த பதவியை ராஜினாமா செய்தார். மேலும், இவர் கடந்த 2016 முதல் 2020 வரை, கோவில் நகைகளில் சிலவற்றை அடகு வைத்துள்ளது தெரிய வந்தது. இந்த அடகு வைத்த நகைகளின் மூலம் சுமார் ரூ. 12.40 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் எடுத்துள்ளார். இதன் காரணமாக, பண மோசடி செய்தது, ஏமாற்றியது உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், இவருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது
- Advertisement -