டெல்லியில் கடந்த மே 28ஆம் அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி தலைமையில் திறக்கப்பட்டது. அப்போது அங்கு ஆதீனங்கள் மூலமாகப் பல பூஜைகள் செய்யப்பட்டு தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட செங்கோல் அந்த நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது.ஏனென்றால், இந்த இந்தச் செங்கோல் சோழ வம்சத்தில் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக இருந்தது.
அப்படி பூஜை செய்து நிறுவப்பட்ட செங்கோல் முன்பாக விழுந்து கும்பிட்ட பிரதமர் மோடி அவர்கள், புனிதமான இந்த செங்கோலை புதிய நாடாளுமன்றத்தில் நிறுவியத்தின் மூலம் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நம் அதிர்ஷ்டம் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. சிதம்பரம் அவர்கள் ”செங்கோல் தொடர்பாகப் பல புனைக் கதைகள் பரவி வருகின்றன. அதில் குறிப்பாக இந்தியச் சுதந்திரம் அடைந்த பிறகு மவுண்ட் பேட்டன் நேருவிடம் கைப்பற்றிய செங்கோல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்குப் பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. சிதம்பரம், இந்த செங்கோல் 1947 ஆகஸ்ட் 14ம் தேதி மவுண்ட் பேட்டன் பிரபு டெல்லியிலேயே இல்லை. அவர் பாகிஸ்தானின் கராச்சியிலிருந்தார் என விளக்கியுள்ளார்.