- Advertisement -
சொடக்கு தக்காளி பொதுவாகச் சாலையோரத்தில் அதிகளவில் காணப்படும். இதுபற்றி தெரியாமலேயே பழுத்த பழங்களைச் சிறுவர்கள் பறித்துச் சாப்பிடுவார்கள். இந்த சொடக்கு தக்காளிக் காய் குமிழ் போன்ற மேல் தோலுக்குள் இருக்கும். இதில் நன்கு முற்றிய பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் நோய்கள் நீங்கும். சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனைகள் சரியாகும்.
அதைப்போல், இந்தப் பழத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் அனீமியா, சோர்வு, அறிவுத்திறன் குறைபாடுகள் சரியாகும். மேலும், இந்த சொடக்கு தக்காளி வலி நிவாரணியாகவும், கட்டிகளைப் போக்கும் தன்மை கொண்டதாகவும், சிறுநீர்ப் பெருக்கியாகவும் விளங்குகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -