- Advertisement -
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை வெப்பம் வாட்டி வந்தது. இதையடுத்து, நேற்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்ததும், இனி தென்மேற்கு பருவமழை கேரளா பகுதியில் ஒட்டிய மாவட்டங்களுக்குக் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்தது
அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகச் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 7செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது என்றும், திருச்சி மாவட்டம் சிறுகுடியில் 6 செ.மீ. மழை பெய்துள்ளதாகவும், நெல்லை மாவட்டம் ஊத்து, ராஜபாளையம், பெரம்பலூர், நன்னிலத்தில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது என சற்றுமுன் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- Advertisement -