- Advertisement -
இந்த காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த காளகஸ்தீஸ்வரர் கோவிலுக்குத் திங்கட்கிழமைகளில் பக்தர்கள் அதிகமாக வருவார்கள். அன்று ராகு கால வேளையான காலை 7.30மணி முதல் 9மணி வரை, இறைவனுக்குச் சிறப்பு ஆராதனை நடைபெறும்.
அப்போது, திருமணம் நடைபெற வேண்டும் என எண்ணும் கன்னியரோ, இளைஞரோ அல்லது அவர்களது பெற்றோர்களோ, சம்பந்தப்பட்டவர்களின் ஜாதகத்தை அர்ச்சனை தட்டில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர்.அப்படிச் செய்தால், அந்த வரனுக்கு மூன்று மாதங்களில் திருமணம் பெறுவது உறுதி என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். அன்று வெகு தொலைவிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து ஆராதனை செய்வது வழக்கமாக உள்ளது.
- Advertisement -