இன்று முதல் மே 31-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூரில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இதனிடையே, குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். கேரளா-தென் கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய கதைகள்
தமிழகம்
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (செப்.27) முதல் வருகின்ற அக்டோபர்...
தமிழகம்
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த...
தமிழகம்
சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு...
தமிழகம்
திமுக கூட்டணியில் உறுதி : விசிக அதிரடி அறிவிப்பு
அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லை என்ற அறிவிப்பு தமிழ்நாடு...
சமீபத்திய கதைகள்