Sunday, April 21, 2024 7:19 pm

பைக் ரைட்டை வைத்து அஜித்தை கடுப்பேற்றிய பிரபலம் !அஜித் எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித் குமார் தனது வரவிருக்கும் விடமுயற்சி படத்திற்காக நடிக்க தயாராகிவிட்டார். அவரது 52 வது பிறந்தநாளை முன்னிட்டு, மே 1 அன்று, திரைப்பட தயாரிப்பாளர் மகிழ் திருமேனி, அஜித்குமார் நடித்த இந்த படத்தின் தலைப்பை ட்விட்டரில் கைவிட்டார். அஜீத் குமாரின் 62வது படத்தைக் குறிக்கும் வகையில் இந்தப் படத்திற்கு முன்பு ஏகே 62 என்று தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டது. விடமுயற்சியின் மற்ற நடிகர்கள் குறித்து தயாரிப்பாளர்கள் வாய் திறக்கவில்லை. ஆனால் நாயகியாக பொன்னியின் செல்வன் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் காத்திருக்கிறது என்றாலும், இந்த யூகம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அஜித் ராசியில்லாத நடிகர் என்று சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு இருந்தாலும் கூட. தயாரிப்பாளர் சோழ பொன்னுரங்கம் தமிழில் அமராவதி படத்தில் நடிகர் அஜித்தை அறிமுகம் செய்து வைத்தார். அஜித்தை அமராவதி படத்தில் அறிமுகம் செய்த சோழ பொன்னுரங்கத்திடன் பலர் சார்.. வேண்டாம், இவர் ராசியில்லாத நடிகர் என தெரிவிக்க,அதெல்லாம் பொருட்படுத்தாமல் அஜித்தை அமராவதி படத்தில் அறிமுகம் செய்து வைத்தார் சோழ பொன்னுரங்கம்.

அமராவதி படம் நல்ல ஹிட் கொடுத்தது. இதன் பின்பு அடுத்தடுத்து அஜித்துக்கு பட வாய்ப்பு கிடைத்தது. ஒரு தயாரிப்பாளர் ஒரு நடிகரை அறிமுகம் செய்து வைத்து அந்த நடிகர் எதிர்காலத்தில் உச்சத்துக்கு வந்தாலும், உரிமையோடு எந்த நேரமும் நேரில் சந்திக்கு உரிமை அறிமுகம் செய்து வைத்த அந்த தயாரிப்பாளருக்கு உண்டு. ஆனால் தற்பொழுது சோழ பொன்னுரங்கம் எளிதாக அஜித்தை சந்திக்க முடியாத தூரத்தில் இருக்கிறார்.

மேலும் படம் தயாரிக்க முடியாத நிலையில் தான் சோழ பொன்னுரங்கம் தற்போது இருக்கிறார். அவருக்கு ஒரு படம் நடித்து கொடுத்து அவருக்கு நன்றி உணர்வுடன் அஜித் இருந்திருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அஜித் நிச்சயமா சோழ பொன்னுரங்கம் போன்டர்வர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்திருப்பார், ஆனால் அதை வெளியில் தெரியாமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் பற்றி மற்றொரு விஷயம் வெளியில் வந்துள்ளது. அஜித் எதையும் நேரடியாக பேச கூடியவர், மேலும் அதிக கோபப்பட கூடியவர். ஒரு கால கட்டத்தில் அஜித் கார் ரேஸ் , பைக் ரேஸ் என தீவிரமாக இருந்த பொது பிரபல திரைப்படம் தயாரிப்பாளர் KR அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது. நடிகர் அஜித்தை நம்பி கோடி கணக்கில் முதலீடு செய்து படம் எடுக்கிறார்கள், ஆனால் அவர் கார் ரேஸ், பைக் ரேஸ் என அவர் பக்கம் சென்று கொண்டிருக்கிறார்,

இந்த நிலையில் நடிகர் அஜிக்கு விபத்து ஏற்பட்டு எதாவது ஓன்று நடந்து, படப்பிடிப்பு தடைபட்டால், அதனால் ஏற்பட்டும் நஷ்டம் பற்றி அஜித் நினைத்து பார்க்க வேண்டும் என KR பேசியிருந்தார். இதற்கு அஜித் அப்போது மிக காட்டமாக பதில் கொடுத்திருந்தார், கண்ட நாய் எல்லாம் அட்வைஸ் பண்ண வேண்டாம் என அஜித் தெரிவித்தது, சினிமா வட்டாரத்தில் பெரும் சல சலப்பை ஏற்படுத்தியது.

இப்படி யாருக்கு பயம் கொள்ளாமல் துணிவுடன் பேசும் அஜித், ஒரு முறை தயாரிப்பாளர்களுக்கு பெப்சி ஊழியர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையின் போது, நியாயம் பெப்சி ஊழியர்கள் பக்கம் தான் இருக்கிறது என அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதனால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் AM ரத்தினம் தயாரிப்பில் அஜித் நடிப்பதற்காக கொடுத்த அட்வான்ஸ் பணத்தை பெப்சி ஊழியர்களுக்கு ஆதரவாக அஜித் குரல் கொடுத்தார் என்பதற்காக அட்வான்ஸ் தொகையை திரும்பி வாங்கி சென்றார் AM ரத்தினம் என கூறப்படுகிறது. எப்படி துணிச்சலாக பல போராட்டங்களை எதிர்கொண்டு தான் இன்று பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள அஜித் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு பொது விவகாரங்களில் தலையிடுவது இல்லை என்பது குறிப்பிடதக்கது.

இதற்கான படப்பிடிப்பு சென்னையில் ஏற்கனவே நடந்து வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்கப்படும் இந்த அதிரடி திரில்லர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இதற்கிடையில், த்ரிஷா கிருஷ்ணனைப் பற்றி பேசுகையில், நடிகை அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்