இந்த கோடைக்காலத்தில் (சித்திரை, வைகாசி) அரைக்கீரை மற்றும் புளிச்சக்கீரையைத் தவிர்க்க வேண்டும். காற்று அதிகம் உள்ள காலங்களில் (ஆனி, ஆடி) அரைக் கீரை, கீரைத்தண்டு, சிறுகீரை, பருப்புக் கீரை மற்றும் முள்ளங்கிக்கீரை போன்றவற்றைத் தவிர்க்கலாம். இந்த முன் மழைக்காலங்களில் (ஆவணி, புரட்டாசி) சிறுகீரை, பருப்புக் கீரை, வெந்தயக் கீரை, முள்ளங்கிக் கீரை மற்றும் பசலைக்கீரை ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.
பின் மழைக்காலங்களில் ( ஐப்பசி, கார்த்திகை) அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக் கீரை மற்றும் கீரைத்தண்டு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். முன் பனிக்காலங்களில் (மார்கழி, தை) அகத்திக் கீரை, சிறுகீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கிக் கீரை ஆகியவை வேண்டாம். பின் பனிக்காலங்களில் ( மாசி, பங்குனி) சிறுகீரை, பசமைக் கீரை மற்றும் பருப்புக் கீரையைத் தவிர்க்கலாம்.
ஆனால், இந்த பொன்னாங்கண்ணிக் கீரை, கொத்தமல்லிக் கீரை, புதினா, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, கறிவேப்பிலை போன்றவற்றை எல்லாப் பருவங்களிலும் சாப்பிடலாம்