உங்கள் கைகள் உடலைத் தொடக் கூடாது. தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றுப் பகுதியில் வைத்து, இரு கை விரல்களையும் கோத்துக் கொள்ள வேண்டும். இதைத் தினமும் காலை, மாலை என இரு வேளையும் 5 முதல் 15 நிமிடங்கள் வரை இந்த உஜாஸ் முத்திரை செய்யலாம்.
இதன் பலன்கள், உங்கள் கர்ப்பப்பை,சினைப்பை, முட்டை ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும். அதைப்போல், அடிவயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகளும் வலுப்பெறும். ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்யும், ஆண்களின் வீரிய விருத்திக்கு உதவி செய்வதுடன், விந்தணுக்கள் உற்பத்திக்கும் உதவுகிறது. உங்களுக்கு மன அமைதி, மகிழ்ச்சி, புதிய உத்திகள், புதியன உருவாக்கும் திறமை, படைப்பாற்றல் ஆகியவற்றை மேம்படச் செய்கிறது.
மேலும், காலையில் தூங்கி எழுந்ததும் சோம்பலாய் உணர்பவர்கள் இந்த முத்திரையைச் செய்தால், உற்சாகமும் தெளிவும் கிடைக்கும். அதேசமயம், இந்த தண்ணீரைக் கண்டால் ஏற்படும் பய உணர்வு (Hydrophobia) உள்ளவர்களுக்கு இப்பிரச்சனை சரியாகும்.