- Advertisement -
டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியில் பிரதமர் மோடி தலைமையில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறக்க உள்ளார். இந்நிலையில், இதைக் குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் எனப் பல எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து, இவ்விழாவைப் புறக்கணித்து வருவதாக அடுத்தடுத்து அறிவித்தது. மேலும், இதுதொடர்பான வழக்கு இன்று (மே 26) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதைக் கொண்டாடும் விதமாக, 75 நாணயத்தை வெளியிடவுள்ளது ஒன்றிய அரசு. மேலும், இந்த நாணயத்தில் புதிய நாடாளுமன்ற கட்டடம் மற்றும் நாடாளுமன்ற வளாகத்தின் படங்கள் இடம்பெறும் என ஒன்றிய நிதியமைச்சகம் சற்றுமுன் தகவல் அளித்துள்ளது.
- Advertisement -