- Advertisement -
உலகிலேயே அதிக உயரம் கொண்ட எவரெஸ்ட் மலையில் இந்தியா உட்படப் பல நாடுகள் அதன் உச்சிக்குச் சென்று சாதனை புரிந்துள்ளனர். சிலர் இந்த எவரெஸ்ட் மலையில் செய்த சாதனையில் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளனர். அதிலும் பலருக்கு இந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது லட்சியமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி என்பவர் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ் பெண் என்ற சாதனையை தற்போது படைத்துள்ளார். இவர் மலையேற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 லட்சமும், அமைச்சர் உதயநிதி 15 லட்சமும் ஏற்கனவே நிதியுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -