தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஜூன் 1 பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. அதைப்போல், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என்றது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் அதிகளவு இன்னும் இருப்பதால், பலதரப்பினர் பள்ளி தேதிகள் மாற்றக் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் வரும் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் எனச் சற்று நேரத்திற்கு முன் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள், இந்த பள்ளிகள் மாற்றுத் தேதியில் திறப்பது மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகும் என்றார். மேலும், அவர் மாணவர்கள் நலன் தொடர்பான கருத்துரைகளைச் செவிமடுத்து, செயல்படுத்திய அரசுக்கும், அமைச்சருக்கும் எனது பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.