இன்று (மே 26) காலை முதலே தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் தம்பி வீட்டிலும், அவரது நண்பர்கள் வீட்டிலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை சென்னை, கோவை, கரூர் போன்ற அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வருமானவரி சோதனை நடத்த என்ன காரணம் என இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் இந்த ஐடி ரெய்டு குறித்துக் கேட்ட போது, ”எனது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை. இது போன்ற சோதனைகளை நான் எதிர்கொள்வது புதிதல்ல. எனது சகோதரர் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி அதிகாரிகள் உள்ளே சென்ற வீடியோ எனக்கு வந்துள்ளது, அதைப் பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.